என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » காளஹஸ்தி கொலை
நீங்கள் தேடியது "காளஹஸ்தி கொலை"
காளஹஸ்தி அருகே காதல் மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்து கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பதி:
காளஹஸ்தி அருகேயுள்ள வெங்லடூர் கிராமத்தை சேர்ந்தவர் சர்வன் (வயது 21). இவர் சித்தூரில் உள்ள கடையில் ஊழியராக வேலை செய்து வந்தார்.
அப்போது சித்துரை சேர்ந்த அண்ணாமலை என்பவரின் மகள் சத்யா (வயது 19) என்பவரை 3 ஆண்டுகளாக காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
பின்னர் தனது சொந்த ஊரில் சத்யாவுடன் குடும்பம் நடத்தி வந்தார். இவர்களுக்கு பெண் குழந்தை உள்ளது. சத்யாவுக்கு வேறு ஒருவருடன் தொடர்பு உள்ளதாக நினைத்து சர்வன் மனைவியிடம் அடிக்கடி தகராறு செய்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று மாலை கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த சர்வன் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து சத்யா வயிற்றில் சரமாரியாக குத்தினார்.
இதில் குடல் சரிந்து விழுந்த சத்யா அலறி கூச்சலிட்டார். கத்தி குத்தை சத்யா தடுக்க முயன்ற போது சர்வனுக்கும் லேசான காயம் ஏற்பட்டது. சத்யாவின் அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் ஓடிவந்தனர். அங்கு சத்யா இறந்து கிடந்தார்.
இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர்கள் புத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சர்வனை பிடித்து வைத்து கொண்டனர். புத்தூர் டி.எஸ்.பி. சவுமியா லதா, இன்ஸ்பெக்டர் எல்லம்மராஜீ ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். பொதுமக்கள் சர்வனை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
சர்வனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காதல் மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
காளஹஸ்தி அருகேயுள்ள வெங்லடூர் கிராமத்தை சேர்ந்தவர் சர்வன் (வயது 21). இவர் சித்தூரில் உள்ள கடையில் ஊழியராக வேலை செய்து வந்தார்.
அப்போது சித்துரை சேர்ந்த அண்ணாமலை என்பவரின் மகள் சத்யா (வயது 19) என்பவரை 3 ஆண்டுகளாக காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
பின்னர் தனது சொந்த ஊரில் சத்யாவுடன் குடும்பம் நடத்தி வந்தார். இவர்களுக்கு பெண் குழந்தை உள்ளது. சத்யாவுக்கு வேறு ஒருவருடன் தொடர்பு உள்ளதாக நினைத்து சர்வன் மனைவியிடம் அடிக்கடி தகராறு செய்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று மாலை கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த சர்வன் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து சத்யா வயிற்றில் சரமாரியாக குத்தினார்.
இதில் குடல் சரிந்து விழுந்த சத்யா அலறி கூச்சலிட்டார். கத்தி குத்தை சத்யா தடுக்க முயன்ற போது சர்வனுக்கும் லேசான காயம் ஏற்பட்டது. சத்யாவின் அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் ஓடிவந்தனர். அங்கு சத்யா இறந்து கிடந்தார்.
இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர்கள் புத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சர்வனை பிடித்து வைத்து கொண்டனர். புத்தூர் டி.எஸ்.பி. சவுமியா லதா, இன்ஸ்பெக்டர் எல்லம்மராஜீ ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். பொதுமக்கள் சர்வனை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
சர்வனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காதல் மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X